சிறிலங்காவை எதிராகச் சந்திக்குமா இந்தியா? பேராசிரியர் பொல் நியூமன்


சிறிலங்கா பற்றிய தனது கொள்கை நிலைப்பாட்டை, இந்தியா மறுபரிசீலனை செய்ய தகுந்த நேரம் இதுதான். பிராந்திய கேந்திர அரசியல் நலன்களைக் கொண்ட, சிறிலங்கா சார்பான இந்தியாவின் நிலைப்பாடு என்பது இந்தியா சார்பான கொள்கை நிலைப்பாட்டுக்கு சிறிலங்காவைக் கொண்டுவருவதில், இந்தியா எவ்வளவு தூரம் வெற்றி கண்டிருக்கின்றது என்பதில்தான் தங்கியுள்ளது.
கடந்த காலங்களில், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமைச் சபையில் கொண்டுவர எத்தனிக்கப்பட்ட விவாதங்கள், தீர்மானத்துக்கு எதிராக நிலையெடுத்திருந்த இந்தியா, சிறிலங்காவுக்கான ஆதரவு தளத்தை தேடிக்கொடுத்தது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பதில், மேற்குல நாடுகள் வரைந்துள்ள அளவுகோல்களை முன்னிறுத்தி, தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட போரினை, மனித உரிமை மீறல்களாக வரையறுக்கும் மேற்குலகம், இதன் ஊடாக தங்களுக்கு எதிராக மேற்குலகம் செயற்படுகின்றது என்ற தோற்றப்பாட்டுடன், லத்தீன் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகளின் ஆதரவினை ,சிறிலங்காவுக்கு இந்தியா பெற்றுக் கொடுத்துள்ளது.
இத்தகைய வழிமுறைகள் ஊடாக, சிறிலங்காவை தன்வசப்படுத்தி வைத்திருக்க இந்தியா முயற்சி கொண்டிருந்தாலும், இந்தியாவுக்கு சாவல்விடுகின்ற நிலையிலேயே, சிறிலங்காவின் செயற்பாடுகள் உள்ளன.
இதற்கு சமீபத்திய உதாரணமாக, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் சிறிலங்காப் பயணத்தைக் குறிப்பிடலாம்., மீனவர் விவாகரம், இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு ஆகியன தொடர்பில், இந்தியாவுக்கு சிறிலங்கா அளித்த வாக்குறுதிகளை, சிறிலங்கா எவ்வாறு பின்னர் கையாண்டு கொண்டது என்பதனை கவனத்தில் கொள்ளலாம்.
13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் அரசியல் தீர்வுக்கு தயார் என அளிக்கப்பட்ட வாக்குறுதி , பின்னர் பாராளுமன்றத் தீர்வுக்குழுவே இறுதி முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டமை. தமிழக மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையினரின் தாக்குதல்கள் நிறுத்தப்படுமென கொடுக்கப்பட்ட வாக்குறுதி, கடலில் கரைந்து போனது போல், தொடரும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் ஆகியன, இந்தியாவுக்கு சிறிலங்கா விடும் சவால்களாகவே உள்ளன. சிறிலங்காவின் இத்தகைய போக்கினால், சிறிலங்கா போன்ற சிறியதொரு நாடு, இந்தியாவுக்கு சவாலாக அமைவது வெட்கக் கேடானது.

எனவே, சிறிலங்கா தொடர்பிலான இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டினை மீளாய்வு செய்வதற்கு இதுவே தகுந்த தருணம். தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவை மையப்படுத்தி அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு, சிறிலங்காவை எதிரும்புதிருமாக இந்தியா சந்திக்குமா?
நன்றி நாதம் 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment