பூலோகம் இருண்டதாக கனவு கண்ட பூனை


பொதுமக்களின் அழிவைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டுமென தமிழ்நாடும் புலம்பெயர் உலகமும் குரல் கொடுத்த போது இந்தியாவின் மத்திய அரசு அமைதி காத்தது.
  
போரில் அழிவுகள் நாளும்பொழுதும் அதிகரித்து அவலக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்த போது மனிதாபிமானப் போரை நடத்துவதாக அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.
 
பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமா? இலங்கைக்கு வெகு பொருத்தமான கேள்வி இது.
 
போரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்ற தீர்மானத்துடன் வெளிநாடுளில் உலகப் பயங்கரவாத ஒழிப்புடன் இலங்கைப் பயங்கரவாதத்தையும் முடிச்சுப் போட்டு சகல உதவிகளையும் பெற்றுக் கொண்டு வன்னியில் இலங்கை அரசு போரைத் தொடங்குவதற்கு ஆயத்தமானதே. வன்னியிலிருந்த உலக நாடுளின் தொண்டு நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜக்கிய நாடுகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என வெளிநாட்டவர் அனைவரையும் அரசு வெளியேற்றியது. போரில் அரச படைகள் குதித்தன.

அரச படைகள் முன்னேறிச் சென்று விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்த பிரதேசங்களை மீட்ட செய்திகளே வெளிவந்து கொண்டிருந்தன. எறிகணை வீச்சுக்கள் கண் மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டு வந்த தகவல்களும் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அங்கு மிங்கும் பாதுகாப்புத் தேடி அலைந்து திரிவதையும் ஊடகங்கள் காண்பித்தன.
 
காயமடைந்த பொதுமக்கள் பற்றியும் மருத்துவமனைகள் சில எறிகணை வீச்சுக்களாலும்  குண்டுவீச்சுக்களாலும் பாதிக்கப்பட்ட செய்திகளும் மக்கள் உணவுக்கும் குடிநீருக்கும் அவஸ்தைப் படுவதையும் ஊடகங்கள் மூலம் அங்கு கடமையாற்றிய மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களால் ஒரளவு அறிந்து கொள்ள முடிந்தது. ஏறிகணை வீச்சுக்களில் மாண்டவர்கள் பற்றியும் இடையிடையே தகவல்கள் வெளிவந்தன.
 
சில இடங்களைப் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாகப் படைத்தரப்பு அறிவிக்கும் செய்திகள் இலங்கை வானொலியில் வெளிவரும். பாதுகாப்பு வலயங்கள்  மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்து உயிர்ப்பலி ஏற்பட்ட செய்திகளும் வெளிவரும். போர் அழிவுகள்  நாளும்பொழுதும் அதிகரித்து அவலக்குரல்கள்  ஒலித்துக் கொண்டிருக்கையில் மனிதாபிமானப் போரை நடத்துவதாக அரசு அறிவித்துக் கொண்டிருந்தது.
 
பொதுமக்களின் அழிவைத் தடுக்க இந்தியா தலையிட வேண்டுமென தமிழ்நாடும்  புலம்பெயர் உலகமும் குரல் கொடுத்த போது  இந்தியாவின் மத்திய அரசு அமைதி காத்தது.
 
தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி அரசு மத்திய அரசின் பிரணாப் முகர்ஜி, சிவசங்கர் மேனன், எம்.கே. நாராயணனுடன் சேர்ந்து நாடகமாடியது. இதன் விளைவை அடுத்துவந்த பொழுது தேர்தலில் கருணாநிதியின் தி.மு. கழக ஆட்சி அறிந்து கொண்டது.
 
இப்பொழுது பூலோகம் விழித்துக் கொண்டது; பூனை அங்குமிங்கும் அலைந்து தனக்கு வந்துள்ள நெருக்கடிகளைத் தீர்க்கவே ஆதரவு தேடுகிறது. பால் வார்த்த இந்தியா போர்க்காலத்திலும் அதன் பின் ஜ.நா.விலும் உதவியது போல இப்பொழுதும் இலங்கையை நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலும் உதவக்கூடும்.
 
ஆனால் இலங்கை ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் இந்திய ஆட்சியாளர்களும் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்பதையும் தமிழர்கள் தமது உரிமையைப் பெற்று தன்மானத்துடன் வாழ்வதற்கான தளம் அமைக்கப்படும் வரை எத்தனை அழிவுகள் இழப்புக்கள் நேர்ந்தாலும் வியந்து விட மாட்டார்கள் என்பதை இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஆட்சிக்கு வந்தவர்களும் ஆட்சி அதிகாரத்துக்காகப் போட்டி போடுபவர்களும் தமிழர்கள் மீது சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் இழைத்த அநீதிகளால் உயிரையும் உடமைகளையும் நிலத்தைப் பறிகொடுத்தும் மனோபலமும் கொண்டு இன்றும் போராடுகின்றனர்.
 
1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்களை ஒடுக்கி  அடக்கும் கூட்டங்களும் செயல்களுமே ஆட்சிக்கு வந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.
 
இந்தியா சுதந்திரம் பெறும் நேரத்தில் இந்தியாவைப் பிரிந்து பாகிஸ்தானை உருவாக்கித் தருமாறு முகமமதலி ஜின்னா கேட்டுப்பெற்றது போல இலங்கையில் அன்றிருந்த தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை.
 
சட்டங்களை உருவாக்கப்போகும் நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தலுக்கு பெரும்பான்மைச் சமுகத்தவர் கேட்கும் தொகுதி வாரிப் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையினருக்கு சிறுபான்மையினரை நசுக்க வாய்ப்பளிக்கும் ஆதலால் இனவாதப் பிரதிநிதித்துவ முறையே வேண்டுமென்று தமிழ்த் தலைவர்கள் கேட்டனர்.
 
சுதந்திர இலங்கையில் அமையவிருக்கும் நாடாளளுமன்றத்தில் நூறுதொகுதிகளில்  ஜம்பது தொகுதிகள் சிங்களவர்களுக்கும் மீதி ஜம்பது தொகுதிகள் தமிழர்கள் இஸ்லாமியர்கள், பறங்கியர்கள் என சிறுபான்மையினருக்குப் பிரித்து ஒதுக்கப்பட வேண்டுமென்று ஜி.ஜி. பொன்னம்பலம் சமபலப் பிரதிநிதித்துவம் கோரினார்.
 
இக் கோரிக்கையின் மீது ஜி.ஜி பொன்னம்பலம் ஆணைக்குழு முன்னிலையில் எட்டு மணி நேரம் வாதாடினார். ஆனாலும் ஆணைக்குழு இதனை நிராகரித்தது. இலங்கை சுதந்திரமடைந்த பத்தாண்டுகளின் பின் அதாவது 1958 ஆம் ஆண்டில் இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக தூண்டிவிடப்பட்ட இனக் கலகத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளை அறிந்து இலங்கை அரசியல் யாப்பிணை உருவாக்கிய சேர்.ஜவர் தென்னி தாம் பெரும் தவறு செய்துவிட்டதாக லண்டனிலிருந்து சொன்னார்.
 
1956 இல் ஒத்திகை பார்த்து 1958 இல் தொடங்கி 1977, 1983 வரை தமிழ் மக்களுக்கு கலகங்களைத் தொடங்கி இன அழிப்பு நீடித்தது. 
 
பயங்கர வாத ஒழிப்பு என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டில் மாண்ட தமிழர்களின் தொகை பற்றி இன்னும் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை ஆனால் பயங்கரவாதிகள்  அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
 
போராளிகளும் பொதுமக்களும் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக கருணா என்ற இன்றைய பிரதியமைச்சர் முரளிதரன் கூறுகிறார். ஆனாலும் புலிகள் பற்றி இப்போது புலம்பெயர்ந்த புலிகள் பற்றியும் கூட்டமைப்பினரும் கூட புலிகள் போன்றே நடந்து கொள்கின்றனர் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.
 
இனப்பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காண்பதற்கான முயற்சி எதையும் காணோம். 13 வது திருத்தம் அதற்கும் கூடியதான செயல் என்றெல்லாம் பேசப்படுகின்றது.  நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இப்பொழுது  நிற்கிறது. இன்றுள்ள உடனடிப் பிரச்சினை இம் மாத இறுதியில் கூடவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம்தான். இதன் முடிவில்தான் இனப்பிரச்சனையின் தலைவிதியும் தங்கியிருக்கிறது.
 
மத்திய கிழக்கு நாடுகள் சிலவற்றைப் போல இங்கும் கிளர்ச்சிகளுக்கு முயற்சி தொடங்குகிறது. விதைத்தது எப்படி முடிகிறதென்று.

நன்றி - உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment