புலிகளின் குரல் வானொலி நிலையம் மீதான விமானத் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு - 27 நவம்பர் 2007

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் ஏ-09 நெடுஞ்சாலை வீதிவழியே உள்ள 155ஆம் கட்டைப் பகுதியிலுள்ள புலிகளின்குரல் வானொலிநிலையம் மற்றும் அதனை அண்டிய பொதுமக்களின் குடியிருப்புக்கள், வர்த்தக நிலையங்கள், பொது நூலகம் என்பனவற்றின் மீது கடந்த 27.11.2007 அன்று மாலை 4.30மணியளவில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் மற்றும் மிக் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் மூன்று புலிகளின் குரல் நிறுவனப் பணியாளர்கள், அயலவர்கள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் என 10பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10பேர் படுகாயமடைந்தனர்.

இத்தாக்குதலைக் கண்டித்து ருNநுளுஊழு அமைப்பு தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட மகேஸ்வரனின் தாயார் சீதாலட்சுமியின் கூறும்போது 'எனக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை இவன் தான். மாவீரர் தினத்திற்கு கிளிநொச்சித் துயிலுமில்லத்திற்குப் போகவேண்டுமென்று முதல் நாளே முறிகண்டியிலுள்ள எனது தங்கையின் வீட்டிற்குச் சென்றவன். என்னுடைய பிள்ளை துயிலுமில்லம் போகும்போது தான் இது நடந்தது. இவன் தானே எனக்குக் கொள்ளி போடுகிற பிள்ளை. எனக்கு முன்னர் அவனை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத அளவிற்கு ஆக்கிவிட்டார்கள். என்னுடைய கணவரும் இந்திய இராணுவத்தினர் செய்த சித்திரவதைகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்.' என்றார்.

தமிழ் மக்களின் தேசியம், விடுதலை சார்ந்து இயங்கிய ஊடங்கள் அனைத்தும் சிங்கள பேரினவாதத்தினால் எதோ ஒரு வகையில் அடக்கப்பட்டுக்கொண்டேதான் இன்றுவரை இருக்கின்றது. உலகத்தின் அனைத்து தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்த போதும் சிங்கள ஆட்சியாளர்கள் தங்களின் நடவடிக்கைகளில் இருந்து சிறிதளவேனும் பின்வாங்கமளே இன்றுவரை தமது செயற்பாடுகளை மேற்கொண்டு இருக்கின்றார்கள் என்பது தான் தமிழ் ஊடங்களின் வரலாறாக உள்ளது.

இச்சம்பவத்த்தில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள்
01. முரளிதரன் சிந்துஜன் 11 மாணவன்
02. கறுப்பையா பிரியதர்சனன் 20 மாணவன்
03. தியாகராசா மகேஸ்வரன் 27 விவசாயம்
04. செல்வராஜா சிவகுமாரன் 46 வர்த்தகர்
05. கணேசமூர்த்தி சுபாஜினி 36 புலிகளின்குரல் வானொலி நிலைய அறிவிப்பாளர்
06. மகாலிங்கம் சுரேஸ்லின்பியோ 36 புலிகளின்குரல் வானொலி நிலையப்பணியாளர்
07. தருமலிங்கம் தவமணிதேவி 62 வயோதிபா
08. கிருஸ்பிள்ளை தருமலிங்கம் புலிகளின் குரல் வானொலி நிலையத்தின் சாரதி
09. ஆனந்தராசா தெய்வநாயகி 55 வீட்டுப்பணி
10. இராசலிங்கம் பிரதீபன் 21

இச்சம்ப்பவத்த்தில் காயமடைந்தவர்களின் விபரம்
01. பவநிதி 24
02. குணசீலி 29
03. நிர்மலாதேவி 54
04. கவிதா 29
05. தினேஸ்குமார் 21
06. ஸ்ரெலா 35
07. சாந்தபோதினி
08. ஜனனி 33
09. ஜி.மனோஜ் 04
10. சி.பவிதா 06
Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment