அனோமா பொன்சேகாவின் கண்களிலிருந்து வருவது கண்ணீர்? தமிழ் தாய்மார்களின் கண்களிலிருந்து வருவது பன்னீர்?

'அரசன் அன்றறுப்பான். தெய்வம் நின்றறுக்கும்' என்ற பழமொழி இவ்வளவு சீக்கிரமாக இலங்கை வரலாற்றுப் பக்கங்களில் ஒரு நிலையான அத்தியாயத்தை உருவாக்குமென்று எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள். தனது கணவரான சரத் பொன்சேகாவுக்காக (இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்) சர்வதேசத்தை கண்ணீரோடு கூக்குரலிட்டு அழைக்கும் அனோமா, ஒருகணம் இலங்கையில் தமிழ் தாய்மார்களினதும், விதவைகளினதும் கண்ணீரைப் பற்றி பெண் என்ற வகையில் சிந்தித்துப்பார்க்க வேண்டுகிறோம். இவைதான் கண்ணுக்கு தெரியாவிடினும் கொழும்பிலே, தனது வாழ்விடத்திற்கு அருகிலே வீதி வீதியாக எத்தனை தாய்மார் கதறி அழுது கூக்குரலிட்டு திரிந்தார்கள் என்பதை உங்கள் கண்கள் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க முடியாது. அந்தக் கண்களின் பார்வையானது தமிழ் தாய்மார்கள் என்றும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றும் ஒரு வட்டத்திற்குள் நின்று நீங்கள் ரசித்ததை இச்சந்தர்ப்பத்தில் எண்ணிப்பார்க்க வேண்டுகிறோம்.

'சுவரில் எறிந்த பந்து மீண்டும் வருவது' போல இப்போது தர்மம் வந்து உங்கள் தலையில் வீழ்ந்துள்ளது. உங்கள் கணவருக்காக சர்வதேசத்தை நோக்கி கூப்பாடு போடும் உங்கள் கண்ணீருக்கு ஒரு வலிமையையும் பெறுமதியும் இருக்குமென்றால், அதுவானது ஏற்கனவே தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரைக் கண்டு இரங்கியிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதில் நியாயமும் இருக்கும்.

'தர்மம்' நடாத்தும் நாடக மேடையில் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. அது உங்கள் கணவரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் காட்சி. இரண்டாம் பாகம் அதைத் தொடர்ந்து வெகு விரைவில் அரங்கேற இருக்கிறது.

அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காட்சி.

காலம் காட்டும் காட்சிகளுக்காக நாடக மேடையை விட்டு அகலாமல் தொடர்ந்து பொறுமையுடன் காத்திருப்போமா?

தசக்கிரீவன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. நீங்க அறிவாளிதான்

    ReplyDelete