ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இரசாயனத்தாக்குதலில் தப்பிய ஒரேயொரு பொதுமகன்


சிவரூபன் எனப்படும் இவர் வன்னியில் வசித்துவந்தார்.  2009 ம் ஆண்டு வைகாசிமாதம் 15 ம் திகதி ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் இரசாயனத்தாக்குதலில் தப்பிய ஒரேயொரு பொதுமகன் ஆவார். 
இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டமையும் குற்றுயிராகக் கிடந்த மக்களை இராணுவத்தினர் படுகொலை செய்தமையையும் உலக நாடுகள் அறிந்த விடையமே. குற்றுயிராக இருந்த இவரை மக்கள் காப்பாத்தி சிறிலங்காவில் மருத்துவம் செய்து வந்தனர். தற்போது இவர் உயிரோடு இருக்கும் விடையத்தினை அறிந்த ஸ்ரீலங்கா புலனாய்வு இவரை கொலை செய்ய முற்சி செய்கின்றது ஏனனில் இவரையும் அழித்து விட்டால் உலக நாடுகள் ஸ்ரீலங்கா சனாதிபதி மகிந்தாவை பன்னாட்டு நிதிமன்றத்தில் நிப்பாட்ட முடியாது எனும் காரணத்தினால் இவரை கொலை செய்ய முயல்கின்றது ஸ்ரீலங்கா புலனாய்வு.
இது சம்பந்தமான ஆதாரங்கள் சனல் 4 மற்றும் ஏராளமான இணையங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபட்டமை யாவரும் அறிந்த விடையமே. தற்போது மனித உரிமை மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் ஸ்ரீலங்கா மீதான போர் குற்றங்களை விசாரிப்பதினால் இவரை மனித உரிமை மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் பயன்படுத்தி போர் ஆதாரங்கள் வெளியுலகத்திற்குக் கிடைத்து விடும் என்பதனாலேயே இவ்வாறன இன அழிப்புகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
இவர் ஒரு கல்லுரி மாணவர்.  இவரின் பெற்றோர்கள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது மர்மமாகவே இருக்கின்றது. இவ்வாறான இன அழிப்புகளை உலக நாடுகள் தட்டி கேட்க வேண்டும் என்று நாமும் ஊடகம் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கின்றோம்





நன்றி மனிதன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment