இலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்ல; சிறிதரன் எம்.பி


இலங்கை வரலாற்றில் சிங்கள மக்களே வந்தேறு குடிகள். தமிழ் மக்கள் அல்ல என்பதை பெளத்த பிக்குகள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும் .கடும் போக்கு கருத்துக்களைக் கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள். எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேதானந்த தேரர் வடக்கு கிழக்குப் பகுதி தமிழருக்குச் சொந்தமில்லை என்று குறிப்பிட்டமை தொடர்பாக அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் சிங்கள் பௌத்த பிக்குகளின் செயற்பாடு என்பது, இலங்கையை முற்று முழுதாக சிங்கள நாடு என காட்டுவதாகவே அமைந்துள்ளது. அவர்கள் எப்போதுமே, இலங்கை தமிழ் மக்களின் மண் என்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அந்த வகையிலேயே அண்மையில், மோதானந்த தேரரின் கருத்தும் அமைந்துள்ளது.

வடக்குக் கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகப் பகுதி. இதனை கடும் போக்குடைய பெளத்த பிக்குகள் ஏந்தவெரு காலப்பகுதியிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களுக்கு உண்மையாம வரலாறு தெரியாது.

இலங்கையில் வாழ்கின்ற தமிழருக்கு என்று தனியான வரலாறு இருக்கின்றது. ஆதியிலிருந்து இயக்கர் ,நாகர் என்ற இனம் இலங்கையில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இருகின்றன. அவர்கள் தமிழர்களே.

ஆனால் சிங்கள் மக்களின் மூதாதையரான விஜயன் குழுவினர் இலங்கைக்கு தற்செயலாகவே வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களே வந்தேறு குடிகள். 

அண்மையில் கூட பொலநறுவை,காலி மற்றும் அநுராதபுர பகுதிகளில் சிவன் ஆலயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஆதியிலிருந்து இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்ந்து வந்தமைக்கான சான்றாகவே காணப்படுகின்றது. இதனை பெளத்த பிக்குகள் மறைக்க முற்படுகிறான்றார்கள்.

அண்மைக்காலமாக தமிழர்களின் நிலங்களில் திட்டமிட்ட வகையிலே சிங்கள பெளத்த பிக்குகள் விகாரைகளை அமைத்து வருகின்றார்கள்.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் தொடர்பான கடும் போக்கு கருத்துக்களை கூறி இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கவிடாமல் தடுக்கும் ஒரு தீய சக்தியாக இப்பெளத்த பிக்குகள் விளங்குகிறார்கள்.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக உண்மையான விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை உலகத்திற்கு பயங்கரவாதிகளாக காட்டி தமிழ் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்காமல் தடுத்தவர்கள் இப்பிக்குகளே. இவர்கள் காலத்திற்கு காலம் இவ்வாறான கருத்துக்களை கூறிவருபவர்கள். என்று தெரிவித்தார்.


தேரருக்கு வரலாறு தெரியாது;மாவை 

வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி அல்ல என்று கருத்துரைப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார்.வடக்குக் கிழக்கு தமிழரின் பூமியல்ல அவ்வாறு உரிமை கோருவதற்கு தமிழர்களுக்கு எந்தவிதமான சான்றோ அல்லது உரிமையோ கிடையாது என ஜாதிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்த கருத்துத் குறித்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேதானந்த தேரர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். அவருக்கு இலங்கையின் வரலாறு தொடர்பாக முழுமையான அறிவு கிடையாது.

வடக்கு கிழக்குப் பகுதியானது தமிழர்களின் பூர்வீக வாழ்விடம். இதனை காலத்திற்கு காலம் எழுந்த வரலாற்று நூல்கள் எடுத்துக் கூறுகின்றது. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தேரரின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடமை வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே இவிடயம் தொடர்பாக விரைந்து வரலாற்று ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்ததோடு,

கே.எம்.டி சில்வா என்னும் சிங்கள வரலாற்று ஆசிரியர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழர் செறிந்து வாழும் பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகால அரசியலமைப்புச் சீர்திருத்த சட்ட மூலங்களின் ஆதரங்களிலே தமிழர்களின் பாரம்பரிய பூமியாக வடக்குக் கிழக்கு பகுதி என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் செறிந்த குடிப்பரம்பலுடன் காணப்படுவதாக கூறுகின்றது.

இதனை எல்லாம் அறியாத தேரர் இவ்வாறான கருத்துக்களை கூறி மகிந்த அரசின் துணையுடன் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளா
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment