தெரிவுக்குழு தொடர்பாக ஆராய்கிறது கூட்டமைப்பு; விரைவில் உறுதியான முடிவு நேற்றைய கூட்டத்தில் தீர்மானம்


இனப்பிரச்சினைக் குத் தீர்வு காண்பதற் கென இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட் டமைப்பு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. தெரிவுக்குழுவில் பங் கேற்பதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து நேற்றுக்கூடிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டன.
 
இது குறித்து விரைவில் ஒரு தீர்க்கமான முடிவை மேற்கொள் வது எனவும் நேற்றைய  கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டிருக்கிறது.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுக் காலை தலைவர் இரா. சம்பந்தன் தலைமை யில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. 
 
இனப்பிரச்சினைக் கான அரசியல் தீர்வை எட்டமுடியாமைக்கு கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்காமையே காரணம் என அரசு தொடர்ச்சியாகக் கூறிவருகிறது.  அத்துடன் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிடமும் அரசு நேரடியாக வற்புறுத்தி வருகிறது. எனினும் இதுகுறித்து கூட்டமைப்பின் தலைமை உறுதியான முடிவு எதனையும் இதுவரை வெளியிடவில்லை. இந்த நிலையில் இந்தத் தெரிவுக்குழு விடயம் குறித்து ஆராயவே நேற்றைய கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது.
 
இந்தக் கூட்டத்தில் தெரிவுக்குழுவில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. தீர்வுக்கான பேச்சுகளைத் தொடர்வதானால் அரசு தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும் என அரசு தொடர்ந்து வற்புறுத்தி வருவதால் அது குறித்து சாதகமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்தனர். இதற்கு சிலர் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். எனினும் இந்த விடயத்தில் தீவிரமாக ஆராய்ந்து விரைவில் ஒரு முடிவை எட்டுவதற்கு தலைவர் சம்பந்தன் தீர்மானித்ததாகக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உதயனுக்குத் தெரிவித்தார்.
 
நேற்றைய கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசு  கூட்டமைப்பு இடையேயான பேச்சுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கான பெயர்களைத் தருமாறு அரசு கேட்டமையால் பேச்சுகள் தொடரமுடியாமல் தடைப்பட்டன. எனினும் இந்த விடயத்தில் நாம் உறுதியாக உள்ளோம். தெரிவுக்குழுவில் பங்கேற்க முடியாது எனவும் நாம் அவர்களிடம் கூறவில்லை. தீர்வு தொடர்பான வரைவை அரசு முன்வைக்கும் பட்சத்தில் அதுபற்றி பரிசீலித்து முடிவெடுக்கலாம் என்றே கூறியிருந்தோம். எனினும் அரசு விடாப்பிடியாக உள்ளது. இதுகுறித்து இன்றைய (நேற்று) கூட்டத்தில் கலந்துரையாடினோம். உறுப்பினர்கள் பலரும் தமது கருத்துகளை முன்வைத்தனர். எனினும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் கூடி இந்த விடயம் தொடர்பில் உறுதியான முடிவொன்றை எடுப்பது எனத் தீர்மானித்துள்ளோம் என்றார்.
 
அத்துடன் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, புத்தர் சிலை விவகாரம் ஆகியவை குறித்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்யவேண்டியிருக்கிறது. சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைப் பெற்று அந்த வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைவிட எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் மூலமும் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவது என முடிவு செய்துள்ளோம் என்றும் மாவை மேலும் கூறினார். 

உதயன்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment