மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சிச் தத்துவம் பேசிய டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல்வாதிகளும்

வட்டுக்கோட்டைத்தீர்மானத்தின் பிரகாரம் தனித்தமிழீழமே தமிழ்மக்களுக்கான அரசியல் விடுதலைக்கான ஒரே வழி என தமிழ்மக்கள்(1977) வாக்களித்தனர். அதன் பின்னர் தமிழ் இளைஞர்களின் ஆயுதப்போராட்டம் முனைப்புப்பெற்றது. அந்தகாலப்பகுதியில் பல விடுதலை இயக்கங்கள் தமிழ்மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கு ஆயுதப்போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும் என கிளர்ந்தெழுந்த இளைஞர்களில் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர். ஆரம்பத்தில் தமிழீழம் என்ற கொள்கைக்காக ஈ.பி.ஆர்.எல்.எப் இலிருந்து போராடிய அவர், இந்தியாவிலிருந்த காலப்பகுதியில் தனிமனித சச்சரவிற்காக துப்பாக்கி பிரயோகம் செய்ததால் இந்தியத்தமிழ் பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டார். அச்சம்பவத்தால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை இவரை தமது அமைப்பிலிருந்து நீக்கியது. கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா சிறையிலடைக்கப்பட்டார். பின் புலனாய்வு முகவர்களினுடாக முன்னாள் ஐனாதிபதி பிரேமதாசாவுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஒப்புக்கொண்டதன் பேரில் ஐனாதிபதி பிரேமதாசாவின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியப்புலனாய்வுத்துறையின் ஆதரவுடன் விடுவிக்கப்பட்டு (தற்போதும் இந்தியச்சட்டத்தின் பிரகாரம் தேடப்படும் ஒருநபர்) இரகசியமாக இலங்கை வந்து ஈ.பி.டி.பி என்ற இயக்த்தை ஸ்தாபித்து அதன் செயலாளர் நாயகமாகினார்.

இலங்கை அரசு இவரை விடுதலைப்புலிகளிற் கெதிரான இராணுவ மற்றும் அரசியல் செயற்பாடுகளிற்கு பயன்படுத்தியது. இவரது ஆரம்ப செயற்பாடானது யாழ்குடாநாட்டின் தீவகத்திலிந்து ஆரம்பிக்கப்பட்டது. தீவகத்தில் இராணுவத்தின் துணைக்குழுவாக செயற்பட்டு, பல தமிழ் இளைஞர்களை கொன்றொழிக்க, கைதுசெய்யப்பட்ட காரணமாக இருந்தவர். பல தமிழ் பெண்களை இராணுவத்தின் பாலியல் தேவைகளிற்காக கடத்திக்கொடுத்த பெருமைகளைப் பெற்றவராவர். பின்னர் தமிழ் மக்களை மிரட்டி பிரதிநிதித்துவம் பெற்றார். சிங்கள அரசாங்கத்தின் கொள்கைகளிற்கு ஆதரவாக இருக்கும் தமிழ்மக்கள் பிரதிநிதியாக சர்வதேச நாடுகளிற்கு காட்டி, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்த சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலியாக செயற்பட்டுவந்தவர் இவராவார்.

ஆரம்பத்தில் தீவகத்திலிருந்து செயற்பட்ட இவர், 1996 காலப்பகுதியில் யாழ்குடாநாடு சிங்களப்படைகளிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் குடாநாட்டில் தனது காலைப்பதித்தார். 1996 ம் ஆண்டு தொடக்கம் 2002 வரை தமிழ் மக்களை கடத்துதல், கொலைசெய்தல், பெண்களை மானபங்கப்படுத்தல், தமிழ்உணர்வாளர்களை கொல்லுதல், கப்பம் பெறுதல் உட்பட பல தமிழின விரோத செயற்பாடுகளை செய்த தமிழின ஒட்டுண்ணியாவார். குறிப்பாக யாழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்திய யாழ் பி.பி.சி செய்தியாளர் நிமலராஐன் படுகொலை, தினமுரசு பத்திரிக்கை ஆசிரியர் அற்புதனை கொலைசெய்ததனுடாக தமிழ்மக்களின் அவலங்களை சாவதேச அளவில் வெளிப்படுத்தி சிங்கள அரசிற்கு அழுத்தங்களை கொடுக்கும் வாய்ப்பை இல்லாமல் செய்தவர். தமிழின விரோத செயற்பாட்டிற்கு உதாரணமாக இது போன்ற பல சம்பங்களை எடுத்துக்கூறலாம்;.

தென் இலங்கைச் சிங்களத்தின் வாழ்வரசியல் அடிமையான இவர் தமிழின அடையாளத்துடன் மக்களை மிரட்டி தனது குறுகிய சுயநல அரசியல் நோக்கத்திற்காக தமிழ் மக்களை சொல்லொணாத் துயரங்களிற்கு உள்ளாக்கியதில் முக்கியமானவர் தமிழர்களைக் கொண்டே தமிழ்மக்களை அழிக்க சிங்களம் பயன்படுத்திய முக்கிய துரும்புச்சீட்டுத்தான் இந்த டக்ளஸ் தேவானந்தா. ஆரம்பத்தில் தமிழீழம் என்ற கோரிக்கையுடன் புறப்பட்ட அவர் பின்னர் அதிலிருந்து பிரழ்;ந்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி(ஆதிகாரமற்ற) என்ற கோசத்துடன் வலம்வந்தார். குறிப்பாக 2002 ஏற்பட்ட சமாதான நடவடிக்கையை கடுமையாக சாடிய அவர் இலங்கையில் ஒற்றை ஆட்சி அமைப்பின் கீழ் தமிழ் மக்களிற்கு பொருத்தமான தீர்வு எடுக்கலாம் என தென்இலங்கை சக்திகளிற்கு ஊதுகுழலாக இருந்து கருத்துத் தெரிவித்து வந்தவர். ஆட்சியிலுள்ளவர்களை சார்ந்து நீண்டகாலம் தனது அரசியல் இருப்பை நகர்த்திக்கொண்டு செல்வதற்காக தமிழ் மக்களின் அரசியல் ஆபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்கும் இவர்களைப்போன்ற தமிழ் ஒட்டுண்ணிகளால் அரசியல் பலமற்றிருக்கும் தமிழ் சமூகம் பாரிய பின்னடைவை சந்திக்கப்போகின்றது.

இலங்கையின் அரசுடன் இணைந்து 2005 – 2009 வரையான காலப்பகுதியில் பல தமிழ் இளைஞர்கள், யுவதிகளை கொலைசெய்தல், ஆட்கடத்தல் பணம்பறித்தல் போன்ற பல துரோகத்தனங்களை மேற்கொண்டார். இத்துன்பியல் செயற்பாடுகளை தமிழின விரோதியான இவரைக்கொண்டு செய்து விட்டு அம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை காரணமாக்கி சிங்களப்பேரினவாத ஆட்சியாளாகள் சிங்களத்தின்;; அரசியல் நகர்வுடன்; இணைத்துச்செல்ல போகின்றது.

விடுதலைப்புலிகளின் தமிழீழக்கொள்கையை விமர்சித்து வந்த இவர், அரசியல் விடுதலைக்கான மூலோபாயத்தைக் கொண்ட விடுதலைப்புலிகளை சிங்களனுடன் சேர்ந்து அழித்துவிட்டு, சிங்கள ஆளும் வர்க்கத்துடன் இணைந்து தமிழ்மக்களிற்கு சிறந்த அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்ற சரணாகதி அடிப்படையிலேயே அரசியலை நடத்திவருகின்றார்.

தமிழ்மக்களிற்கு அரசியல்விடுதலையை பெற்றுத் தருவதற்காக எனக்கூறி சிங்களத்துடன் சேர்ந்த இவர், சிங்களனைப்போன்று தமிழ் மக்களை வதைத்து துன்புறுத்தி, கொலைசெய்து, தமிழ்ப்பெண்களை சிங்களனுக்கு போகப்பொருளாக்கி மானபங்கப்படுத்தி, தமிழ் மக்களிற்கெதிரான மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தியவர்களை கொன்றொழித்தார். இவைகள் தமிழ்மக்களிற்கு அரசியல் பாதுகாப்பை பெறுவற்காக கொடுத்த விலைகள்.

அரசியலின் பெயரால் எவ்வளவோ தமிழின விரோதச்செயற்பாடுகளைச் செய்ததினுடாக எதை அடைந்தார் என்ற மதிப்பீட்டை வைத்தால், ஆரம்பத்தில் தமிழீழம் என்ற கோரிக்கையுடன் புறப்பட்டு பின்னர் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி (அதிகாரமற்ற) பெற்றுக்கொடுப்பதாக சொல்லிவந்த விட்டு தற்போது அரசியல் அதிகார பகிர்வற்ற தத்துவமான சிங்களப்பேரினவாத ஒற்றையாட்சிக்குள் இணக்க அரசியல் தத்துவம் என்ற புதிய கதைபேச பேசத்தொடங்கியுள்ளார். கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கதைபோல இவரது அரசியல் தமிழினத்தை சிங்களத்திற்குள் கரைத்துவிடக்கூடியது.

டக்ளஸ்சின் சுயநல அரசியல் சுகபோக வாழ்க்கைக்காக நீண்டகாலமாக பல லட்சம் மக்களைப்பறிகொடுத்து, சொல்லெணாத்துன்பங்களைத்தாங்கிய மக்கள் சமூகத்தின் வேதனைகளை சுயமூலதனமாக்கி இறுதியில்; தமிழ்மக்களை தென் இலங்கைச் சிங்களத்தின் அடிமையாக்கி தமிழனின் அரசியல் அபிலாசைகளை படுகுழிக்குள் புதைத்துவிடும் நோக்குடன் இறுதி நகர்வுகளையும் செய்யத்தெடங்கிவிட்டார். தனது கட்சிச்சின்னத்தில் போட்டி போட முடியாத இயலாமை இவரின் தற்போதைய முக்கிய அரசியல் அடைவு.

விடுதலைப்புலிகளை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் களங்கம் ஏற்படுத்த சிங்களத்துடன் செயற்பட்ட இவரால் சிறையகதி முகாமிற்குள் சென்று மக்களைக்கூட பார்க்க முடியவில்லை. வடக்கில் பாரிய சிங்களக்குடியேற்றங்கள் பௌத்தமத அடையாளங்களை தமிழர்பகுதிக்குள் அமைத்து தமிழர்தாயகம் என்ற கோட்பாட்டை சிதைக்கும் நகர்வை தடுக்கமுடியாமை, தேர்தலில் தமிழ் மக்களை மிரட்டி அல்லது கள்ளவோட்டு போட்டு தமிழ் மக்களின் தனித்த அரசியல் பிரதிநிதித்துவத்தை சிதைக்கும் செயற்பாட்டை முன்னெடுத்து தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை சிங்களத்தின் காலில் போட முற்பட்டுள்ளார். இவைதானா இவ்வளவு கால அரசியல் வாழ்க்கையில் டக்ளஸ்சின் அடைவு. டக்ளஸ்சின் சுகபோக அரசியல் தவிர்த்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஏதாவது அடையப்பட்டுள்ளதா? கடைசியில் சிங்களனிடம் தமிழனை அரசியல் அடிமையாக்குவது தான இவரது பொதுவாழ்வின் இறுதி அடைவு?

விடுதலைப்புலிகளின் தலைவர் என்ன செய்தாலும் தனது கொள்கையில் வழுவாது கொள்கைக்காக மட்டும் போராடி தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவரைத்தவிர வேறு தலைவர்கள் யாராவது கொள்கையில் உறுதியாக விலைபோகாது நின்று செயற்பட்டார்களா? பிரபாகரனை அழிப்பதற்கு துணைபோன தமிழின விரோத சக்திகள் தமிழ் மக்களுக்காக என உயிரைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு களமமைத்து செயற்படுவார்களா? இலங்கைத்தீவில் தமிழ்மக்களிற்கான தீர்வை பெறுவதில் பிரபாகரன் தான் இடைஞ்சல் என விமர்சித்த, செயற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் புலமையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் தற்போது விடுதலைப்புலிகள் வலுவிழந்த சூழலில் தமிழ்மக்களிற்கு என்ன செய்யப்போகின்றார்கள்?. பிரபாகரனை வைத்து அரசியல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த, இருப்பை தக்கவைத்த அனைவரும் இப்போது என்ன செய்யப்போகிறார்கள். தற்போது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக எவ்வாறு ஒருங்கிணைந்து செயற்படப்போகிறார்கள் என்பதை அறிய தமிழினம் ஆவலாக இருக்கின்றது. நிச்சயமாக தமிழ்மக்களிற்காக குரல் கொடுத்தால் கொல்லப்படுவோம் என தமிழினத்தை விற்ற அனைவரும் மௌனித்திருக்கின்றாகள் என்பதே உண்மை ஏனேனில் கோழைகளால் செய்யக்கூடியது இதுமாத்திரமே. தமிழ்மக்கள் இவர்கள் போன்ற தமிழினவிரோதிகளை அடையாளம் காணவேண்டும்.


அபிஷேகா
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

1 கருத்துரைகள் :

  1. தங்களின் கருத்து முரண்பாடு ஏன் நீங்கள் புலிகளால் அநியாயமாக படுக்கை செய்யப்பட்டவர்கள் எத்தனை எத்தனை அப்பாவிகள் அதுபற்றியும் எழுதலாம் அது ஏன் உங்களுக்கு புரியவில்லை என்று தெரியவில்லை. .இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்?

    ReplyDelete