
'சுவரில் எறிந்த பந்து மீண்டும் வருவது' போல இப்போது தர்மம் வந்து உங்கள் தலையில் வீழ்ந்துள்ளது. உங்கள் கணவருக்காக சர்வதேசத்தை நோக்கி கூப்பாடு போடும் உங்கள் கண்ணீருக்கு ஒரு வலிமையையும் பெறுமதியும் இருக்குமென்றால், அதுவானது ஏற்கனவே தமிழ்த் தாய்மார்களின் கண்ணீரைக் கண்டு இரங்கியிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். அதில் நியாயமும் இருக்கும்.
'தர்மம்' நடாத்தும் நாடக மேடையில் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. அது உங்கள் கணவரான ஜெனரல் சரத் பொன்சேகாவின் காட்சி. இரண்டாம் பாகம் அதைத் தொடர்ந்து வெகு விரைவில் அரங்கேற இருக்கிறது.
அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காட்சி.
காலம் காட்டும் காட்சிகளுக்காக நாடக மேடையை விட்டு அகலாமல் தொடர்ந்து பொறுமையுடன் காத்திருப்போமா?
தசக்கிரீவன்
நீங்க அறிவாளிதான்
ReplyDelete