ஒட்டிசுட்ட்டான் படுகொலையின் பத்தொன்பதாம் ஆண்டு நினைவு - 27.11.1990

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவின் நிர்வாக மையமாக ஒட்டுசுட்டான் கிராமம் விளங்குகிறது. இலங்கையிலுள்ள இந்துக்களின் தான்தோன்றீஸ்வரர் ஆலயங்களில் ஒன்றாக ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரமும் உள்ளது. இங்கு வாழும் மக்கள் இவ்வாலயத்தைச் சூழ்ந்தே செறிவாக வாழ்ந்து வந்தனர். மக்களின் பிரதான தொழில்களாக ஓடு உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, விவசாயம் என்பன காணப்படுவதோடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் அதிக முதலீட்டையும் தொழில் வாய்ப்பையும் பெற்றுத்தருகின்ற தொழிலாகவும், ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை உள்ளது. ஒட்டுசுட்டானின் மையப்பகுதி ஓர் சிறுநகரப் பண்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.

27.11.1990 அன்று ஒட்டுசுட்டானில் பொதுமக்கள் செறிவாக வாழ்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயச் சூழலில் விமானப் படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தின. இத்தாக்குதலில் பன்னிரண்டு பொதுமக்கள் உடல்சிதறி உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தார்கள்.

இத்த்hக்குதலில் கொல்ல்லப்ப்படட்ட்ட ஒட்டிசுட்டானைச் சேர்ந்த மகேநத்திரனின் தங்கையான ஆ.சகீலா தெரிவிக்கையில் 'என்னுடைய அண்ணா 1990ஆம் ஆண்டு மார்கழி மாதம் இருபத்தேழாம் திகதி ஒட்டுசுட்டான் சிவன்கோயிலை அலங்கரிப்பதற்காக இரவு சென்றிருந்தார். அப்போது வானத்தில் உலங்குவானூர்தி வட்டமிட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் வந்து குண்டுத் தாக்குதலை நடத்தியது. அப்போது நாங்கள் எல்லோரும் வீட்டிலிருந்து சற்றுத்தொலைவிலிருந்த எங்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டில் நின்றிருந்தோம். அப்போதுதான் அயலிருந்த ஒருவர் வந்து கோயிலடியில் குண்டு போட்டதால் அண்ணாவிற்குக் காயம் என்று சொன்னார்கள். அப்போது ஓடிச்சென்று பார்க்கும்போது அண்ணாவை முல்லைத்தீவு வைத்தியசாலைக்குக் கொண்டு போயிருந்தார்கள். அங்கு போனபோது ஒரு கால் இல்லாமலும் கையிற் காயத்துடனும் பார்த்தோம். அப்போது அண்ணா அழுதபடி நான் சுகமாகி விடுவேன் என்று சொன்னார். ஆனால் அண்ணா உயிரோடு வரவில்லை. அவருடைய இறப்பு எங்களாற் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அண்ணா இருந்திருந்தால் இப்படியாக நாங்கள் கஸ்ரப்படவேண்டி வந்திருக்காது. எங்களை நல்லபடியாகப் பார்த்திருப்பார். தற்போது நாங்கள் பெரும் கஸ்ரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்தச் சம்பவத்தில் பன்னிரண்டு பேர் இறந்ததுடன், பலர் காயமடைந்தும் இருந்தார்கள்.' என்று கூறினார்.

சிங்கள அரச படைகள் தமிழ் மக்களின் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்கள், வழிபாட்டு தளங்களை இலக்கு வைத்து அழிப்பதுடன் தமிழ் பொதுமக்களையும் படுகொலை செய்து கொண்டிருக்கின்றது. அவ்வாறான சிங்கள் படைகளின் தாக்குதலில் ஒன்றுதான் இத்தாக்குதல். இன்று வரை பல ஆலயங்கள் வழிபாட்டுதளங்களில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எந்த தாக்குதலுக்கும் அரச படைவீரர்கள் தண்டிக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இச்சம்பவத்த்தில் கொல்லப்பட்டவர்களது விபரங்கள்
01. ஆழவ்hபப்pளi;ள மகேநத்pரன் - 25
02. தம்பிராசா செல்வராசா மாணவர் 23

குறிப்பு :- இச்சம்பவத்தில் பாதிப்படைந்த அனைவரது பெயர் விபரங்களையும் பெறமுடியவில்லை
Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment