கிளிநொச்சி தருமபுரம் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு - 25 நவம்பர் 2007


கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் தர்மபுரக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமமக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

வழமைபோல் கிராம மக்கள் 25.11.2007 அன்றும் தங்களின் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்கள். காலை 7.15 மணியளவில் திடீர் என வான்பரப்பினுள் நுளைந்த சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் எட்டுக்கும் அதிகமான குண்டுகளை வீசின. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் மக்களின் குடியிருப்புக்கள் மீதும் அதனை அண்டிய பகுதிகள் மீதும் வீழ்ந்துவெடித்தன.

இதன்போது யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் எட்டாம் யுனிற் பகுதியில் வசித்துவந்த ஆறுமுகம் வர்ணலிங்கம் குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினர். மேலும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தில் வர்ணலிங்கத்தின் மகன் கமல்ராஜ் என்பவரின் மனைவி தனயோகம் கால், கையை இழந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காது 03.12.2007 இல் மரணமானார்.
இத்தாக்குதல் காரணமாக மக்களின் பயன்தரு மரங்கள், பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் என்பன அழிவடைந்தன.

இன்று வரை இத்தாக்குதலுக்கு பொறுப்பான எந்த விமானப்படை அதிகாரியோ அல்லது எவரேனும் தண்டிக்கப்படவும் இல்லை. விசாரனைகள் மேற்கொள்ளப்படவுமில்லை.

இச்சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் விபரம்
01. ஆறுமுகம் வர்ணலிங்கம் 54
02. வர்ணலிங்கம் சரஸ்வதி 49
03. வர்ணலிங்கம் சுமிதாநந்தினி 25
04. முருகையா லுபாசினி 15
05. கமல்ராஜ் தனயோகம் 19

இச்சம்பவத்தில் காயமடைந்தவர்களின் விபரம்
01. வர்ணலிங்கம் கமல்ராஜ் 28
02. மு.நடனதேவி 41
03. அ.வேல்முருகு 60
04. லிங்கேஸ்வரன் 60
05. த.அனுசியா 04

Share on Google Plus

About முல்லைப்பிளவான்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துரைகள் :

Post a Comment