Friday, November 27, 2009

இருதரப்பு தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் தமிழர்களுக்கு ஏதும் இருக்கப்போவதில்லை

ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் தேர்தல் விஞ் ஞாபனத்தில் வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினை கள் தொடர்பாக அந்த வேட்பாaளர்கள் முன்வைக்கும் தீர்வுத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தேர் தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என அக் கட்சி தெரிவித்திருக்கின்றது.

வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட பின்பே இந்த முடிவு எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பு கூறியிருக்கின்றது.

ஆக, தமிழர் தரப்பில் பிரதான கட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு, கட்சி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பாகத் தங்கியிருக்கப் போகின்றது.

ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கின்றது. எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக ஜெனரல் சரத் பொன் சேகா நிறுத்தப்படுவது உறுதியாகுமானால், அவரிட மிருந்து வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைக் குத் திட்டவட்டமான தீர்வு நோக்கத்தை உள்ளடக்கிய தேர் தல் விஞ்ஞாபனம் ஒன்றை எதிர்பார்க்க முடியாது என்பதே யதார்த்த நிலைமையாகும்.

தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது அரசையும் உடனடியாக வீட்டுக்கு அனுப்பவும், நிறை வேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அடியோடு ஒழிக்கவும், புதிய அரசியல் முறைமை ஒன்றை ஏற்படுத்த வும் வசதியாக ஓர் இடைக்கால ஏற்பாடாகவே ஜெனரல் சரத் பொன்சேகாவை களத்துக்குக் கொண்டு வருகின்றது எதிர்க்கட்சிகளின் கூட்டணி.

அத்தகைய வேட்பாளரிடம் இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையோ, திட்டமோ இருக்கப்போவதுமில்லை. அவர் அத்தகைய திட்டம் எதையும் தமது தேர்தல் விஞ் ஞாபனத்தில் குறிப்பிடப்போவதுமில்லை என்பது தெளிவு.

மேலும் அத்தகைய தீர்வு யோசனைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தும் வகையில் நீண்டகாலம் ஜனாதி பதித் கதிரையில் அமர்வதற்கு அவருக்கு இடமளிக்கும் விதத் தில் அவரை எதிர்க்கட்சிகள் இப்பதவிக்குக் கொண்டுவர முயலவில்லை என்பதும் வெளிப்படையானது. எனவே இனப்பிரச்சினைத் தீர்வுக்கான திட்டம் ஒன்றைத் தமது பொதுவேட்பாளர், அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பிரேரிப்பதற்கு, அவரை அத்தேர்தலில் முன்நிறுத்துகின்ற எதிர்க்கட்சிகளின் கூட்டு அனுமதிக்கப் போவதுமில்லை.

எதிர்க்கட்சிக் கூட்டைப் பொறுத்தவரை, தமது பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வென்று, பதவிக்கு வந் ததும், தற்போதைய அரசைக் கலைத்துப் புதிதாகக் காபந்து அரசு ஒன்றை ஸ்தாபித்து, புதிய தேர்தல்களை நடத்த வேண்டும், அதேசமயம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து புதிய அரசியல் கட்டமைப்பு ஏற் பாட்டை விரைந்து கொண்டு வருவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அதன் ஒரே நிலைப்பாடாகும். புதிய பொதுத் தேர்தல் மூலம் வருகின்ற அரசே இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எதிரணியின் பிரதான கட்சிகளின் தரப்புகளின் நிலைப்பாடாகவும் உள்ளது.

எனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான யோசனை கள் ஏதும் இருக்கும் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தாம் முன்வைத்த "மஹிந்த சிந்தனை" தேர்தல் விஞ்ஞாபனமே, இம்முறையும் அப்படியே முன்வைக்கப்படும் என்பதை நேற்று அலரிமாளிகையில் தம்மைச் சந்தித்த பத்திரிகை யாளர்களிடம் அவரே உறுதிப்படுத்திவிட்டார்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை "மஹிந்த சிந்தனை"யில் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாக சிந்திப்பதற்கு ஏதும் இல்லை என்பதுதான் அவர்களின் தெளிவான கருத்து; உறுதியான பட்டறிவு.

தாம் ஜனாதிபதிப் பதவிக்கு வந்தால் மூன்று மாதங்க ளுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தென் னிலங்கையின் இணக்கமான கருத்து நிலைப்பாட்டை உரு வாக்கி, அதனடிப்படையில் தீர்வுக்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவார் என்று 2005 ஆம் ஆண்டின் இறுதி யில் "மஹிந்த சிந்தனை" என்ற பெயரில் தமது தேர்தல் விஞ் ஞாபனம் மூலம் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உறுதிமொழியை மீண்டும் ஒரு தடவை நம்பி ஏமாறுவதற்குத் தமி ழர்கள் அவ்வளவு ஒன்றும் முட்டாள்கள் அல்லர் என்பதே உண்மையாகும்.

ஆகவே, தேர்தல் விஞ்ஞாபனங்களைப் பொறுத்த வரை, இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் விட யத்தில்

எதிர்க்கட்சிப் பொதுவேட்பாளரிடம் எந்தத் திட்டமும் இருக்கப்போவதில்லை. ஆளுங்கட்சி வேட்பாளரான ஜனாதிபதியிடம் இருந்தும் புதிய திட்டம் ஏதும் வரப் போவதுமில்லை.

எனவே, தேர்தல் விஞ்ஞாபனங்களை வைத்து, யாரை ஆதரிப்பது என்று தீர்மானிக்க ஏதும் தமிழர்களுக்கு இருக் காது என்பதுதான் உண்மை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக "மஹிந்த சிந்தனை" விஞ்ஞாபனத்தை மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டபோது 2005 இல் தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கும், கிழக்கும் நிர்வாக ரீதியிலேனும் இணைக்கப்பட்டிருந்தது. அவரது ஆட்சிச் சீத்துவத்தின் கீழ் அது இப்போது துண் டிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில், "வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச் சுக்கே இனி இடமில்லை" என்று தெளிவுபடுத்தி விட்டார் ஜனாதிபதி மஹிந்தர்.

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தையும் உள்வாங்கி முடிவெடுப்போம் என்று கூறும் தமிழ்க் கூட்டமைப்புக்கு அவ ரின் இந்த நிலைப்பாடு பற்றிய தகவல் சமர்ப்பணம்

Reactions:

0 கருத்துரைகள்:

Post a Comment